மாதகல் கடற்கரையோர பிரதேசத்தினை சுத்தப்படுத்தும் நிகழ்வு

வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் சபை எல்லைக்குட்பட்ட மாதகல் இறங்குதுறை கடற்கரை பகுதியினை சுத்தப்படுத்தும் நிகழ்வு 14.03.2024 ஆம் திகதி காலை நடைபெற்றது. பிரதேச சபையின் செயலாளர் மற்றும் உத்தியோகத்தர்கள், சண்டிலிப்பாய் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூகமட்ட அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் சண்டிலிப்பாய் பிரதேச செயலக உதவிப் பிரதேசசெயலாளர் திருமதி.நே.செல்வகுமாரி அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தார்.

வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களுக்கான இணையதள அங்குரார்ப்பண நிகழ்வு

வடக்கு மாகாணத்திலுள்ள 34 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான உத்தியோகபூர்வ இணையதளங்கள் 01.03.2024 ஆம் திகதி வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களினால், கைதடியிலுள்ள பிரதம செயலாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர்,வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர்கள், உள்ளூராட்சி மன்ற செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அன்றைய தினம் எமது சபைக்கான இணையதளமும் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

 

 

பொருளாதார ரீதியாக வசதி குறைந்த முதியோா்களுக்கு சத்துணவு வழங்குதல்

பிரதேச சபை எல்லைக்குட்பட்டு வசிக்கும் பொருளாதார வசதிகுறைந்த முதியோா்களுக்கு போசாக்குணவு வழங்குவதற்கான செயற்திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டு வருடாந்தம் வழங்கப்பட்டுவருகின்றமை யாவரும் அறிந்ததே.  

அந்தவகையில் 2023 ம் ஆண்டடின் வரவு செலவு திட்ட ஏற்பாட்டின் அடிப்படையில்  1819  பயனாளிகளுக்கு போசாக்குணவானது அவர்களது வதிவிடங்களிற்கருகில் உள்ள உப அலுவலகங்களில் சபையின் செயலாளர் தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது. 

 

 

Copy Rights Reserved to valikamam South West Pradeshiya Sabha - manipay
Scroll to Top